Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 23 டிசம்பர் (ஹி.ச.)
ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதேசி பெருவிழா பகல் பத்து 4ம் நாள் விழாவில் நம்பெருமாள்
மஞ்சள் வண்ண பீதாம்பரப்பட்டு அணிந்து, கல் இழைத்த அரை கொண்டை சாற்றி, சிறிய
நெற்றிசுட்டி அணிந்து, வைர அபய ஹஸ்தம், மார்பில் பங்குனி உத்திரப்பதக்கம்,
அடுக்குப் பதக்கங்கள் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து
எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்த நிலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கா ரங்கா என
பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால்
அன்போடு அழைக்கப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில்
ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு விழா
வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த 19ஆம்
தேதி தொடங்கியது.
பகல் பத்து 4ம் நாளான இன்று காலை மூலஸ்தானத்தில் இருந்து உற்சவர் நம்பெருமாள்
மஞ்சள் வண்ண பீதாம்பர பட்டு அணிந்து, கல் இழைத்த அரை கொண்டை சாற்றி, சிறிய
நெற்றி சுட்டி அணிந்து, மகர கர்ண பத்திரம், வைர அபய ஹஸ்தம், மார்பில் பங்குனி
உத்திர பதக்கம், ஸ்ரீ மகாலட்சுமி பதக்கம், கஜலட்சுமி பதக்கம், அடுக்கு
பதக்கங்கள், தங்க பூண் பவள மாலை, 2 வட முத்துமாலை, மரகதக் கிளி பெரிய ஹாரம்
உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்திலிருந்து தங்க பல்லாக்கில்
எழுந்தருளி அர்ஜுன மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஆயிரக்கணக்கான
பக்தர்கள் ரங்கா ரங்கா என பக்தி கோசத்துடன் நம்பெருமாளை தரிசனம் செய்து
வருகின்றனர்.
பின்னர் மாலை அங்கிருந்து புறப்படும் நம்பெருமாள் இரவு 9.45 மணிக்கு
மூலஸ்தானம் சென்றடைவார்.
பகல்பத்து வைபவத்தின் 10ம் நாள் வரும் டிசம்பர் 29- ம் தேதி மோகினி
அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சி அளிப்பார். அதன் பின்னர் இராப்பத்து
வைபத்தின் முதல் நாளான வரும் டிசம்பர் ஜனவரி 30-ம் தேதி அதிகாலை 4.30- மணி
அளவில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு பரமபதவாசல் திறப்பு எனப்படும் சொர்க்க
வாசல் திறப்பு நடைபெறும்.
அப்போது ரத்தின அங்கியுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள்
அதிகாலை 5.45 மணிக்கு பரமபதவாசலை திறந்து கடந்து செல்வார்.
இதில் பல
லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ரங்கா ரங்கா என பக்தி
கோசத்துடன் சாமி தரிசனம் செய்வார்கள்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் தலைமையில் செய்து
வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam