ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 8.54 மணிக்கு எல்.வி.எம்., 3 ராக்கெட் வாயிலாக விண்ணில் பாய்ந்த 'புளூபேர்ட்' செயற்கைக்கோள்
ஸ்ரீஹரிகோட்டா, 24 டிசம்பர் (ஹி.ச.) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில், இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து, இன்று டிசம்பர் 24ம் தேதி காலை, 8:54 மணிக்கு, எல்.வி.எம்., 3 ராக்கெட் வாயிலாக, ''புளூபேர்ட்'' செயற்கைக்கோள் விண்ணில
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 8.54 மணிக்கு எல்.வி.எம்., 3 ராக்கெட் வாயிலாக விண்ணில் பாய்ந்த 'புளூபேர்ட்' செயற்கைக்கோள்


ஸ்ரீஹரிகோட்டா, 24 டிசம்பர் (ஹி.ச.)

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில், இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து, இன்று டிசம்பர் 24ம் தேதி காலை, 8:54 மணிக்கு, எல்.வி.எம்., 3 ராக்கெட் வாயிலாக, 'புளூபேர்ட்' செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.

இந்த செயற்கைக்கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

இந்த 'புளூபேர்ட்' செயற்கைக்கோளை அமெரிக்காவை சேர்ந்த ஏ.எஸ்.டி., நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக உருவாக்கி இருக்கிறது. இதன் எடை 6,500 கிலோ.

இது, தொலைதுார கிராமங்களுக்கு, மொபைல் போன், அதிவேக இணையதள சேவைகளை வழங்க உதவும்.

இந்த செயற்கைக்கோளை, நம் நாட்டின், 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையம், விண்ணில் செலுத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்க செயற்கைக்கோளை விண்ணில் ஏவியதை இஸ்ரோ நேரலை ஒளிபரப்பு செய்தது.

Hindusthan Samachar / JANAKI RAM