பெரியார் நினைவு நாள் - சென்னையில் அவரது உருவச்சலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
சென்னை, 24 டிசம்பர் (ஹி.ச) தந்தை பெரியாரின் நினைவு நாளை ஒட்டி சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது உருவச்சலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் இது குறித்து அவர் எக்ஸ் தள க்கத்தில் தெரிவித்துள்ளதாவது, வளைந்
Cm


சென்னை, 24 டிசம்பர் (ஹி.ச)

தந்தை பெரியாரின் நினைவு நாளை ஒட்டி சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது உருவச்சலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும் இது குறித்து அவர் எக்ஸ் தள க்கத்தில் தெரிவித்துள்ளதாவது,

வளைந்து நின்ற முதுகுகள் தலைநிமிர்ந்து தன்மானம் காக்க, தன்னையே இந்த மண்ணுக்குத் தந்த தந்தை பெரியாருக்குப் புகழ் வணக்கம்

தமிழர்கள் தலைகுனியாமல் - ஆதிக்கத்துக்கு அடிபணியாமல் - பகுத்தறிவுச் சிந்தனையோடு சக மனிதரை நேசித்துச் சமத்துவத்தைப் பேணுவதே, இனமானமே பெரிதென அவர் உழைத்த உழைப்புக்கு நாம் செலுத்தும் நன்றி

பெரியார் எனும் பெருஞ்சூரியனைத் திருடவும் முடியாமல் தின்று செரிக்கவும் முடியாமல் திண்டாடும் பகைவர் கூட்டத்தின் வஞ்சக எண்ணங்களை வீழ்த்திட ஒற்றுமை உணர்வோடு ஓரணியில் தமிழ்நாடு நின்றால், என்றும் வெற்றி நமதே என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்

Hindusthan Samachar / P YUVARAJ