Enter your Email Address to subscribe to our newsletters

ராமேஸ்வரம் 24 டிசம்பர் (ஹி.ச.)
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன் தினம் மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டை பெற்று மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.
இந்த நிலையில் தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரு விசைப்படகையும் அதிலிருந்து 12 மீனவர்களை கைது செய்து மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று சிறையில் அடைத்துள்ளது.
இந்த நிலையில் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் மீன்பிடி துறைமுகத்தில் 700 க்கு மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு அரசுக்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவது மட்டுமல்லாது நேரடியாகவும் மறைமுகமாகவும் 5000 மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீன் பிடி தொழிலை சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகின்றது
இதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து விடுதலை செய்ய வழிவகை செய்ய வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam