சிறுபான்மையினர் மீது தாக்குதல் - முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
சென்னை, 25 டிசம்பர் (ஹி.ச.) நாட்டு மக்களை பிளவுபடுத்தி குளிர்காய நினைக்கும் கலவர கும்பல்களை இரும்புகரம் கொண்டு அடக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 25) எக்ஸ் த
சிறுபான்மையினர் மீது தாக்குதல் - முதல்வர் ஸ்டாலின் கண்டனம்


சென்னை, 25 டிசம்பர் (ஹி.ச.)

நாட்டு மக்களை பிளவுபடுத்தி குளிர்காய நினைக்கும் கலவர கும்பல்களை இரும்புகரம் கொண்டு அடக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 25) எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

சிறுபான்மையினர் அச்சமின்றி வாழத் துணையிருப்பதில்தான் பெரும்பான்மையினரின் பலமும் இருக்கிறது; குணமும் இருக்கிறது!

பெரும்பான்மை என்ற பெயரில் சில வலதுசாரி வன்முறைக் கும்பல்கள் தாக்குதல்களிலும் கலவரங்களிலும் ஈடுபடுவது, அதுவும் - மாண்புமிகு பிரதமர் அவர்கள் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கெடுக்கும்போதே ஈடுபடுவது, நாட்டு மக்களுக்குத் தவறான செய்தியையே கொண்டு சேர்க்கும்.

மணிப்பூர் கலவரங்களைத் தொடர்ந்து, இப்போது ஜபல்பூர் - ராய்பூர் மற்றும் பிற இடங்களிலும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் என்பதை நல்லிணக்கத்தை விரும்பும் நாட்டு மக்கள் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒன்றிய பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் 74% அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படும் புள்ளிவிவரங்கள், எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகளை உணர்த்துகிறது.

எனவே, நாட்டுமக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் கலவரக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டியது நம் அனைவரது பொறுப்பும் கடமையுமாகும்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b