Enter your Email Address to subscribe to our newsletters

டெல்லி, 25 டிசம்பர் (ஹி.ச.)
டெல்லியில் குடியரசுத் தலைவர் இல்லம் அருகே உள்ள தேவாலயத்தில் நடந்த சிறப்புப் பிரார்த்தனையில் பங்கேற்ற பிரதமர் மோடி, சிறப்புப் பிரார்த்தனையில் பங்கேற்றார்.
நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேவாலயங்கள் அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன.
இந்த நிலையில், கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, டெல்லி கத்தீட்ரல் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மக்களுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்தார். மேலும் அங்குள்ளவர்களுக்கு பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார்.
அவர் பிரார்த்தனையில் கலந்து கொண்ட பிறகு பிரதமர் மோடி பாதிரியார்களிடம் கலந்துரையாடினார்.
முன்னதாக, ''கிறிஸ்துமஸ் உணர்வு நமது சமூகத்தில் நல்லிணக்கத்தையும், நல்லெண்ணெத்தையும் ஊக்குவிக்கட்டும்'' என பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam