Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 டிசம்பர் (ஹி.ச)
வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு, இன்று (டிசம்பர் 25) தவெக தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.
இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,
வீரத்தின் விளைநிலமான தமிழ் மண்ணிலிருந்து, ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடி வெற்றி கண்ட இந்தியாவின் முதல் அரசி, சமூக, சமய நல்லிணக்கத்தைப் பேணிய எங்கள் கொள்கைத் தலைவர், வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவர்களின் நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்தும் மலர்தூவியும் மரியாதை செலுத்தினேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b