பணி நிரந்தரம் கோரி டிசம்பர் 28-ம் தேதி தலைமை செயலகத்தில் முற்றுகை போராட்டம் - தூய்மை பணியாளர்கள் அறிவிப்பு!
சென்னை, 26 டிசம்பர் (ஹி.ச.) பணி நிரந்தரம் கோரி சென்னை அம்பத்தூர் பகுதியில் 5 மற்றும் 6-வது மண்டலத்தில் உள்ள தூய்மை பணியாளர்கள் கடந்த 2 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுடன் அரசு தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருக
பணி நிரந்தரம் கோரி டிசம்பர் 28-ந்தேதி தலைமை செயலகத்தில் முற்றுகை போராட்டம் - தூய்மை பணியாளர்கள் அறிவிப்பு


சென்னை, 26 டிசம்பர் (ஹி.ச.)

பணி நிரந்தரம் கோரி சென்னை அம்பத்தூர் பகுதியில் 5 மற்றும் 6-வது மண்டலத்தில் உள்ள தூய்மை பணியாளர்கள் கடந்த 2 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அவர்களுடன் அரசு தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இருப்பினும் இதுவரை சுமூகமான தீர்வு எட்டப்படாததால் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் வரும் டிசம்பர் 28-ந்தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளதாக தூய்மை பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.

நிரந்தர பணி நியமன அறிவிப்பு வரும் வரை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / JANAKI RAM