இன்று (டிசம்பர் 26) வீர் பால் திவாஸ்
சென்னை, 26 டிசம்பர் (ஹி.ச.) சீக்கியர்களின் 10-வது குருவான குரு கோவிந்த் சிங்கின் இளம் புதல்வர்களான (சாகிப்ஜாதேக்கள்) பாபா ஜோராவர் சிங் மற்றும் பாபா ஃபதே சிங் ஆகியோரின் உயரிய தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26 அன்று ''வீர் ப
இன்று (டிசம்பர் 26) வீர் பால் திவாஸ்


சென்னை, 26 டிசம்பர் (ஹி.ச.)

சீக்கியர்களின் 10-வது குருவான குரு கோவிந்த் சிங்கின் இளம் புதல்வர்களான (சாகிப்ஜாதேக்கள்) பாபா ஜோராவர் சிங் மற்றும் பாபா ஃபதே சிங் ஆகியோரின் உயரிய தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26 அன்று 'வீர் பால் திவாஸ்' கடைபிடிக்கப்படுகிறது.

1705-ஆம் ஆண்டு, முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தில், குரு கோவிந்த் சிங்கின் இளம் புதல்வர்கள் இருவரும் இஸ்லாம் மதத்திற்கு மாற மறுத்ததற்காக சர்ஹிந்த் ஆளுநரால் உயிருடன் சுவரில் வைத்துக் கட்டப்பட்டு வீரமரணம் அடைந்தனர்.

தங்களின் நம்பிக்கையையும் தர்மத்தையும் விட்டுக்கொடுக்காமல் மிகச் சிறிய வயதிலேயே (9 மற்றும் 7 வயது) அவர்கள் காட்டிய துணிச்சல் ஈடு இணையற்றது.

இளம் வயதிலேயே தர்மத்திற்காக உயிர்நீத்த சிறுவர்களின் வீரத்தை இளைய தலைமுறைக்குக் கொண்டு சேர்த்தல்.

நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காகப் பாடுபட்டவர்களின் தியாகத்தைப் போற்றுதல்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 2022-ஆம் ஆண்டு, சாகிப்ஜாதேக்களின் தியாகத்தை கௌரவிக்கும் விதமாக டிசம்பர் 26-ஆம் தேதியை 'வீர் பால் திவாஸ்' (வீரச் சிறுவர் தினம்) என அறிவித்தார்.

அன்று முதல் நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் இவர்களின் வீரக் கதைகள் எடுத்துரைக்கப்படுகின்றன.

Hindusthan Samachar / JANAKI RAM