விஜயும், சீமானும் பாஜகவின் பிள்ளைகள் என்றால் திருமாவளவன் யாருடைய பிள்ளை? - குஷ்பூ கேள்வி
சென்னை, 26 டிசம்பர் (ஹி.ச) சென்னை பட்டினம்பாக்கம் கடற்கரையில் பாஜக சார்பில் சுனாமியால் உயிரிழந்த நபர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மாநில துணை தலைவர் குஷ்பு உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கடலில் பால் ஊற்றி மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து
குஷ்பு


சென்னை, 26 டிசம்பர் (ஹி.ச)

சென்னை பட்டினம்பாக்கம் கடற்கரையில் பாஜக சார்பில் சுனாமியால் உயிரிழந்த நபர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மாநில துணை தலைவர் குஷ்பு உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கடலில் பால் ஊற்றி மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில துணை தலைவர் குஷ்பு பேசியதாவது;

டிசம்பர் 26 ஆம் தேதி யாராலும் மறக்க முடியாத நாள்,அனைவரும் உறங்கி கொண்டு இருந்த நேரம் சுனாமி வந்ததில் அத்தனை மக்கள் உயிரிழந்தனர்.

உயிரிழந்த நபர்களுக்கு பாஜக சார்பாக அஞ்சலி செலுத்தினோம். மேலும் கடலோர வாழும் மீனவர் மக்களுக்கு உணவு வழங்கினோம்.

மேலும் மீனவர்களின் பாதுகாப்புக்காக பிரதமர் மோடி பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.மீனவர்கள் நலனுக்காக பாஜக தொடர்ந்து பாடும் என தெரிவித்தார்.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றினால் மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வந்துவிடுமா என விசிக தலைவர் திருமா பேசியது குறித்தாக கேள்விக்கு, விசிக தலைவர் திருமாவளவன் Mind set இதுதான்,இதுவே கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடினால் எய்ம்ஸ் மருத்துவமனை வந்துவிடுமா என கூற முடியுமா? இந்து மெஜாரிட்டி அதிகமாக உள்ளதால் தொடர்ந்து மண்டையில் கொட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

அவர்களது கூட்டணியில் இருப்பவர்கள் கோயிலுக்கு போவார்கள், பட்டை பூசுவார்கள், தீபம் ஏற்றுவார்கள், வீட்டில் பூஜை நடத்துவார்கள் இதையெல்லாம் நாலு சுவற்றுக்குள் நடக்கும் மக்களுக்கு தெரியாது என நினைப்பார்கள் என கூறினார்.

இந்த தேர்தலுக்கு எந்த கோவிலுக்கும் போக வேண்டாம், எந்த சர்ச், மசூதி பள்ளிவாசலிலும் திருமாவளவன் நிற்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார். திருபரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற சென்னது பாஜக அல்ல நீதிமன்றம் என கூறினார்.

மகாத்மா காந்தி பெயர் மாற்றம் குறித்து பா.சிதம்பரம் விமர்சித்தது குறித்த கேள்விக்கு, அவர்கள் ஆட்சி காலத்தில் நாட்டை ஆண்ட நபர்கள் பெயர்களை சூட்டி உள்ளீர்கள். ஆனால் எதாவது ஒரு மத்திய அரசு திட்டத்தில் மோடி என பெயர் உள்ளதா எனவும் அவர்கள் தான் ராஜூவ்காந்தி பெயரில் திட்டங்களை கொண்டு வந்தார்கள் என கூறினார்.

ராகுல் காந்தி வாக்கு இயந்திரத்தில் குற்றச்சாட்டு உள்ளது என கூறினார் ஆனால் பா.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் அப்படி எதுவும் இல்லை என கூறினார். காங்கிரஸ் உள்ள பல நபர்கள் வாக்கு இயந்திரத்தில் எந்த குளறுபடிகள் இல்லை என கூறி வருகிறார்கள். சொல்வதற்கு வாய் உள்ளது என எதையும் கூற கூடாது யோசித்து பேச வேண்டும் என பா.சிதம்பரம் மகாந்மா காந்தி திட்டத்தில் பெயர் மாற்றம் குறித்து விமர்சனம் செய்தது குறித்து பதில் அளித்தார்.

இந்த தேர்தலில் குஷ்பு போட்டியிட உள்ளாரா என்ற கேள்விக்கு, தேர்தலில் போட்டியிடும் ஆசையோடு நான் கட்சிக்கு வரவில்லை தலைவரும் கட்சி என்ன சொல்கிறதோ அதுக்கு நான் கட்டுப்பட்டு செயல்படுகிறேன் தேர்தலில் வாய்ப்பு கொடுப்பார்கள் பொறுப்பு கொடுப்பார்கள் என எந்த எதிர்பார்ப்போடும் நான் பாஜகவுக்கு வரவில்லை, கட்சி வளர்ச்சிக்கு தான் நான் வந்துள்ளேன் என தெரிவித்தார்.

விஜயும் சீமானும் ஆர்.எஸ்.எஸ் பிள்ளைகள் என விசிக தலைவர் திருமாவளவன் பேசியது குறித்த கேள்விக்கு,திருமாவளவன் யாரின் பிள்ளை, திமுக வின் பிள்ளையா, காங்கிரஸ் பிள்ளையா என கேள்வி எழுப்பினார்.

அதிமுக கூட்டணியில் பாஜக 23 இடங்கள் ஒதுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது என்ற கேள்விக்கு வதந்திகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. விரைவில் டெல்லி சென்று பியூஷ் கோயலை சந்திக்க உள்ளேன். விரைவில் பாஜக மாநில தலைவர் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஒரு நல்ல அறிவிப்பை வெளியிடுவார்கள். பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக வந்த கணக்குகள் வதந்தி மட்டுமே என தெரிவித்தார்.

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு பிறகு படிவம் 6 ல் குழப்பம் உள்ளதா என்ற கேள்விக்கு, ஏற்கனவே அது குறித்து புகார் அளித்திருக்கிறோம் பொதுமக்கள் வாக்களிக்கும் போது எந்த குழப்பமும் இல்லாமல் வாக்களிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம் என தெரிவித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam