Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 டிசம்பர் (ஹி.ச.)
இருமுடி மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு 29 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் 1 நிமிடம் நின்று செல்வதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஜனவரி 3-ந்தேதி முதல் பிப்ரவரி 02-ந்தேதி வரை லோகமான்ய திலக் டெர்மினஸ் - காரைக்கால் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (11017), ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 02-ந்தேதி வரை சென்னை எழும்பூர்- மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலும் (12635), ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 02-ந்தேதி வரை சென்னை எழும்பூர்- மதுரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (12637), ஜனவரி 2-ந்தேதி முதல் பிப்ரவரி 01-ந்தேதி வரை கன்னியாகுமரி - ஹஸ்ரத் நிஜாமுதீன் செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (12641), ஜனவரி 1-ந்தேதி முதல் ஜனவரி 29-ந்தேதி வரை மதுரை ஹஸ்ரத் நிஜாமுதீன் செல்லும் சம்பார்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலும் (12651),
ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 02-ந்தேதி வரை சென்னை எழும்பூர் - திருச்சி செல்லும் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (12653), ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 02-ந்தேதி வரை சென்னை எழும்பூர் செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலும் (12661), ஜனவரி 1-ந்தேதி முதல் ஜனவரி 30-ந்தேதி வரை சென்னை எழும்பூர் நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (12667). ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 02-ந்தேதி வரை தாம்பரம் ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16103), ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 02-ந்தேதி வரை காரைக்கால் தாம்பரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16176),
ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 02-ந்தேதி வரை சென்னை எழும்பூர் - மன்னார்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16179), ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 02-ந்தேதி வரை கன்னியாகுமரி - பனாரஸ் செல்லும் காசி தமிழ் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16367), ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 02-ந்தேதி வரை சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16865), டிசம்பர் 31-ந்தேதி 2025 முதல் ஜனவரி 31-ந்தேதி வரை ஜோத்பூர் -திருச்சி செல்லும் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (20481), ஜனவரி 6-ந்தேதி முதல் ஜனவரி 31-ந்தேதி வரை ராமேசுவரம் பிரோஸ்பூர் செல்லும் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (20497),
ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 1-ந்தேதி வரை செங்கோட்டை சென்னை எழும்பூர் செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலும் (20682), டிசம்பர் 31-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 30-ந்தேதி வரை செங்கோட்டை - தாம்பரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (20684), ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 02-ந்தேதி வரை தாம்பரம் -நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலும் (20691), ஜனவரி 2-ந்தேதி முதல் பிப்ரவரி 01-ந்தேதி வரை புவனேஸ்வர் ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (20849),
ஜனவரி 6-ந்தேதி முதல் பிப்ரவரி 28-ந்தேதி வரை டிசம்பர் 31-ந்தேதி முதல் ஜனவரி 30-ந்தேதி வரை லோகமான்ய திலக் டெர்மினஸ் - மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22101), டிசம்பர் 31-ந்தேதி முதல் ஜனவரி 28-ந்தேதி வரை புதுச்சேரி- புதுடெல்லி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22403), டிசம்பர் 31-ந்தேதி முதல் ஜனவரி 28-ந்தேதி வரை ராமேசுவரம் - பனாரஸ் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22535), டிசம்பர் 31-ந்தேதி முதல் பிப்ரவரி 01-ந்தேதி வரை ராமேஸ்வரம் -அயோத்தி கான்ட் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22613), ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 1-ந்தேதி வரை சென்னை எழும்பூர்- மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22623)
ஜனவரி 1-ந்தேதி முதல் ஜனவரி 29-ந்தேதி வரை மதுரை பிகானேர் அனுவ்ரத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22631), ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 02-ந்தேதி வரை தாம்பரம் நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22657), ஜனவரி 1-ந்தேதி முதல் ஜனவரி 29-ந்தேதி வரை ஜோத்பூர் மன்னார்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22673), ஜனவரி 1-ந்தேதி முதல் பிபரவரி 2-ந்தேதி வரை சென்னை எழும்பூர் சேலம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22153),
மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் 1 நிமிடம் நின்று செல்லும். இவ்வாறாக மொத்தம் 29 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b