சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது
சென்னை, 27 டிசம்பர் (ஹி.ச.) தமிழக அரசு மற்​றும் அரசு உதவி​ பெறும் பள்​ளி​களில் 31.5.2009-ல் பணியில் உள்ள இடைநிலை ஆசிரியர்​களுக்​கும் அதற்கு பின்​னர் பணி​யில் சேர்ந்​தவர்​களுக்​கும் அடிப்​படை சம்​பளத்​தில் பெரிய அளவில் வேறு​பாடு இருந்து வரு​கி
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது


சென்னை, 27 டிசம்பர் (ஹி.ச.)

தமிழக அரசு மற்​றும் அரசு உதவி​ பெறும் பள்​ளி​களில் 31.5.2009-ல் பணியில் உள்ள இடைநிலை ஆசிரியர்​களுக்​கும் அதற்கு பின்​னர் பணி​யில் சேர்ந்​தவர்​களுக்​கும் அடிப்​படை சம்​பளத்​தில் பெரிய அளவில் வேறு​பாடு இருந்து வரு​கிறது.

ஊதிய முரண்​பாட்டை கண்​டித்து சமவேலைக்கு சமஊ​தி​யம் என்ற கோரிக்​கையை வலியுறுத்தி நீண்ட கால​மாக போராடி வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், நேற்று

(டிசம்பர் 26) காலை 10.30 மணிக்கு தொடக்​கக் கல்வி இயக்​குநர் உள்​ளிட்ட கல்​வித்​துறை அலு​வல​கங்​கள் அமைந்துள்ள டிபிஐ வளாகத்தை முற்​றுகை​யிட்டு போராட்​டம் நடத்​தினர். அவர்​களை போலீ​ஸார் குண்டுக்கட்டாகத் தூக்கி போலீஸ் வாக​னங்​களில்

ஏற்​றினர்.

இதனைத் தொடர்ந்து, இரண்டாவது நாளாக ‘சமவேலைக்கு சம ஊ​தி​யம்’ வழங்​கக்​கோரி இன்று

(டிசம்பர் 27) சென்னை எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்​றுகை​யிட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்​யப்​பட்​டனர்.

Hindusthan Samachar / vidya.b