Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 டிசம்பர் (ஹி.ச.)
பயணிகளின் கோரிக்கையை அடுத்து, சென்னை - மேற்கு வங்க மாநிலம், ஷாலிமருக்கு இயக்கப்படும் வாராந்திர ரயில் சேவை, ஜனவரி வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஷாலிமர் - சென்னை சென்ட்ரலுக்கு வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில், வரும் ஜனவரி 5, 12, 19, 26ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும்.
சென்னை சென்ட்ரல் - ஷாலிமருக்கு வாரந்தோறும் புதன் கிழமைகளில் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில், வரும் ஜனவரி 7, 14, 21, 28ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும்.
மேற்கண்ட சிறப்பு ரயில்களில், முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b