Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 28 டிசம்பர் (ஹி.ச.)
தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
குறிப்பாக, தற்போது தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமானோர் சுற்றுலா தளங்களை நோக்கி படையெடுத்து வரும் நிலையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் அருவிகளுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பங்களுடன் வருகை தந்து அருவிகளில் ஆனந்த குளியலிட்டுவரும் நிலையில், குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது கணிசமாக அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
குறிப்பாக, இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் மேலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN