Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 28 டிசம்பர் (ஹி.ச.)
காசி தமிழ் சங்கமத்தின் நிறைவு விழா வரும் டிசம்பர் 30-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.
விழாவில் பங்கேற்பதற்காக சி.பி.ராதாகிருஷ்ணன் ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் முகாம் ஹெலிபேட் தளத்தில் வந்து தரையிறங்குவார்.
அங்கிருந்து சாலை மார்க்கமாக ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் ஆலயம் தங்கும் விடுதி வளாகத்திற்கு சென்று நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை 4-ஆவது ஆண்டாக நடைபெற்ற காசி தமிழ் சங்கமத்தில், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், கலைஞர்கள், விவசாயிகள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
அந்த நிகழ்ச்சியின் நிறைவு விழாவாக இந்த விழா ராமேஸ்வரத்தில் நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய பா.ஜ.க தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN