Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 28 டிசம்பர் (ஹி.ச.)
செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்த கோயிலாகும். இந்த கோயிலில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
பல கோயில்களில் பெண்கள் கருவறைக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.
சில இடங்களில் 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இப்படி பல கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் பெண்கள் மூலவர் கருவறைக்குள் நேரடியாகச் சென்று வழிபடலாம்.
பெண்கள் தாமே விக்ரகங்களுக்கு பூஜைகள் செய்யலாம்.
இந்த கோயிலில் தைப்பூசம், யுகாதி, தமிழ் புத்தாண்டு, சித்திரை பௌர்ணமி, ஆடிப்பூரம், நவராத்திரி, பௌர்ணமி, அமாவாசை, மார்ச் 3 அடிகளாரின் பிறந்தநாள் ஆகியவை முக்கிய விழாக்களாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்து வருகிறார்கள்.
இந்நிலையில், இருமுடி மற்றும் தைப்பூசம் திருவிழாவையொட்டி பல லட்சம் பக்தர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 29 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒரு நிமிடம் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
ஜனவரி 3 -ஆம் தேதி முதல் பிப்ரவரி 2 -ஆம் தேதி வரை லோக்மான்ய திலக் டெர்மினஸ் - காரைக்கால் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (11017), ஜனவரி 1 -ஆம் தேதி முதல் பிப்ரவரி 2 -ஆம் தேதி வரை சென்னை எழும்பூர்- மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலும் (12635), ஜனவரி 1- ஆம் தேதி முதல் பிப்ரவரி 2 -ஆம் தேதி வரை சென்னை எழும்பூர்- மதுரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (12637), ஜனவரி 2 -ஆம் தேதி முதல் பிப்ரவரி 1-ஆம் தேதி வரை கன்னியாகுமரி, ஹஸ்ரத், நிஜாமுதீன் செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (12641), ஜனவரி 1 -ஆம் தேதி முதல் ஜனவரி 29-ந் தேதி வரை மதுரை, ஹஸ்ரத், நிஜாமுதீன் செல்லும் சம்பார்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலும் (12651) மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.
ஜனவரி 1-ஆம் தேதி முதல் பிப்ரவரி 2-ஆம் தேதி வரை சென்னை எழும்பூர் - மன்னார்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (16179), ஜனவரி 1 -ஆம் தேதி முதல் பிப்ரவரி 2 -ஆம் தேதி வரை கன்னியாகுமரி - பனாரஸ் செல்லும் காசி தமிழ் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16367), ஜனவரி 1 -ஆம் தேதி முதல் பிப்ரவரி 2 -ஆம் தேதி வரை சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலும் (16865), டிசம்பர் 31-ஆம் தேதி 2025 முதல் ஜனவரி 31-ஆம் தேதி வரை ஜோத்பூர் -திருச்சி செல்லும் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (20481). ஜனவரி 6 -ஆம் தேதி முதல் ஜனவரி 31-ஆம் தேதி வரை ராமேஸ்வரம் - பிரோஸ்பூர் செல்லும் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரயிலும் (20497) மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.
ஜனவரி 1 -ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 -ஆம் தேதி வரை செங்கோட்டை சென்னை எழும்பூர் செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலும் (20682), டிசம்பர் 31 -ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி வரை செங்கோட்டை- தாம்பரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (20684), ஜனவரி 1- ஆம் தேதி முதல் பிப்ரவரி 2- ஆம் தேதி வரை தாம்பரம் -நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலும் (20691), ஜனவரி 2-ஆம் தேதி முதல் பிப்ரவரி 1-ஆம் தேதி வரை புவனேஸ்வர் - ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (20849), ஜனவரி 6-ஆம் தேதி முதல் பிப்ரவரி 28-ந் தேதி வரை புவனேஸ்வர் -புதுச்சேரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (20851) மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 1 நிமிடம் நின்று செல்லும்.
டிசம்பர் 31-ஆம் தேதி முதல் ஜனவரி 30-ஆம் தேதி வரை லோகமான்ய திலக் டெர்மினஸ் மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22101), டிசம்பர் 31-ஆம் தேதி முதல் ஜனவரி 28-ஆம் தேதி வரை புதுச்சேரி - புதுடெல்லி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22403), டிசம்பர் 31-ஆம் தேதி முதல் ஜனவரி 28 -ஆம் தேதி வரை ராமேஸ்வரம் -பனாரஸ் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22535), டிசம்பர் 31 -ஆம் தேதி முதல் பிப்ரவரி 01-ஆம் தேதி வரை ராமேஸ்வரம் - அயோத்தி கான்ட் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22613), ஜனவரி 1 -ஆம் தேதி முதல் பிப்ரவரி 1-ஆம் தேதி வரை சென்னை எழும்பூர்- மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22623) மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 1 நிமிடம் நின்று செல்லும்.
ஜனவரி 1 -ஆம் தேதி முதல் ஜனவரி 29- ஆம் தேதி வரை மதுரை பிகானேர் அனுவ்ரத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22631), ஜனவரி 1- ஆம் தேதி முதல் பிப்ரவரி 2 -ஆம் தேதி வரை தாம்பரம் - நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (22657). ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஜனவரி 29 -ஆம் தேதி வரை ஜோத்பூர் மன்னார்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22673), ஜனவரி 1-ஆம் தேதி முதல் பிபரவரி 2 -ஆம் தேதி வரை சென்னை எழும்பூர் சேலம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (22153), மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 1 நிமிடம் நின்று செல்லும். இவ்வாறாக மொத்தம் 29 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN