Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 டிசம்பர் (ஹி.ச.)
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தெற்கு ரெயில்வே கோவை- ராமேசுவரம் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயிலை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
கோவையில் இருந்து ராமேசுவரம் செல்லும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண்:06123) வருகிற 29-ம் தேதி அன்று கோவையில் இருந்து இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 3.30 மணிக்கு ராமேசுவரம் சென்றடையும்.
மறுமார்க்கத்தில், வருகிற 30ம் தேதி ராமேசுவரத்தில் இருந்து இரவு 10.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் வண்டி எண்:06124 அடுத்த நாள் காலை 7.30 மணிக்கு கோவை வந்து சேரும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM