வனத்துறை விவசாயத்திற்கு ஆபத்தானது - மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் விமர்சனம்!
கிருஷ்ணகிரி, 28 டிசம்பர் (ஹி.ச.) கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ள ஆதியமான் பொறியியல் கல்லூரியில் ஈஷா அறக்கட்டளையின் ''காவேரி கூக்குரல்'' சார்பாக விவசாய கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த விவசாய கருத்தரங்கில் மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ
மத்திய அமைச்சர்


கிருஷ்ணகிரி, 28 டிசம்பர் (ஹி.ச.)

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ள ஆதியமான் பொறியியல் கல்லூரியில் ஈஷா அறக்கட்டளையின் 'காவேரி கூக்குரல்' சார்பாக விவசாய கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த விவசாய கருத்தரங்கில்

மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், தெரிவித்ததாவது,

'காவேரி கூக்குரல்' முன்முயற்சி மரங்களை அடிப்படையாகக் கொண்ட விவசாயத்தை ஊக்குவிப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வனத்துறை விவசாயத்திற்கு ஆபத்தானது, ஒரு நிலப்பரப்பு காடாக மாறிவிட்டால், அங்கு விவசாயம் செய்வது சாத்தியமற்றதாகி விடுகிறது,என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய ஈஷா யோகா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் பேசுகையில்,

மண்ணின் தரம் குறைந்து வருவதாலும், நதிகள் வற்றி வருவதாலும் விவசாயம் மேலும் மேலும் நிலையற்றதாகி வருகிறது.

சந்தனம் மற்றும் செம்மரம் போன்ற பணத்தை ஈட்டித்தரும் உயர் மதிப்புள்ள மரங்களை விவசாயிகள் பயிரிட வேண்டும்.

சட்டச் சிக்கல்கள் இல்லாமல் அந்த மரங்களை பணமாக்க அனுமதிக்க வேண்டும்.

என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும்,விவசாயிகள் தங்கள் நிலங்களில் வளர்க்கப்படும் மரங்களை வெட்டுவதைத் தடுக்கும் அரசு கட்டுப்பாடுகள் மற்றும் பிரிட்டிஷ் காலச் சட்டங்களிலிருந்து விவசாயத்தை விடுவிக்க வேண்டும்.

என அவர் மத்திய அமைச்சரை வலியுறுத்தினார்.

விவசாய நிலங்களிலும் வன நிலங்களிலும் விளையும் விளைபொருட்களை வேறுபடுத்திப் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.

விவசாய நிலத்தில் வளர்க்கப்படும் அல்லது காணப்படும் எந்தவொரு செல்வமும் விவசாயிக்கே சொந்தமாக இருக்க வேண்டும்.

ஒரு வனச்சரகர் எல்லா மரங்களும் தனக்குச் சொந்தம் என்று நினைக்கிறார், ஆனால் அவை என் நிலத்தில் வளர்க்கப்படும் போது, அவை எனக்கே சொந்தமாக இருக்க வேண்டும், என்று கூறினார்.

Hindusthan Samachar / Durai.J