Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 டிசம்பர் (ஹி.ச.)
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களது இரண்டாம் ஆண்டு நினைவு தினம் குருபூஜையாக அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில் கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசியதாவது;
விஜயகாந்த் சிறந்த நடிகராக, சமூக சேவகராக இருந்தவர். அவரது வாழ்க்கை முன் உதாரணமான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்.
அரசியல் தலைவர் அரசியல்வாதி என வாழ்ந்தவர். பிரதமர் மோடி அவரது சேவையை பாராட்டி பத்ம விபூஷன் என்னும் உயரிய விருது வழங்கி கௌரவித்தது உள்ளார். அவரை வணங்கியதை பாக்கியமாக கருதுகிறேன்.
அனைவரும் சாப்பிட்டார்களா என கேட்ட பிறகு தான் அவர் சாப்பிடுவார். சமூக சேவை அன்னதானம் உள்ளிட்டவற்றை அவரது சொந்த செலவில் மேற்கொண்டார்.
தற்போதும் அறக்கட்டளை சார்பாக இன்றும் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அவரது புகழ் மேலும் ஓங்க வேண்டும் வருங்கால சந்ததியினரும் அவரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam