Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 29 டிசம்பர் (ஹி.ச.)
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்துகளில்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் என்பதற்கு பதிலாக அரசு போக்குவரத்து கழகம் என்று மட்டுமே பொறிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்பு இருந்தது போன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் இன்று பெயர் பொறிக்கப்பட வேண்டும் என்று கூறி நாம் தமிழர் கட்சியினர் அரசிற்கு தொடர்ந்து கோரிக்கையை வைத்து வந்தனர். அதே போல் பல்வேறு மாவட்டங்களில் தமிழ்நாடு என பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டி, தொடர் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், இன்று டிசம்பர் 29 ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில், அரசு பேருந்துகளில் உள்ள அரசு போக்குவரத்து கழகம் என்பதற்கு முன்பு தமிழ்நாடு என்னும் ஸ்டிக்கரை ஒட்டுவதற்கு நாம் தமிழர் கட்சியினர் 10 பேர் ஸ்டிக்கரோடு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, பேருந்து நிலையத்திற்கு வந்த போலீசார் அங்கிருந்த நாம் தமிழர் கட்சியினரை அப்புறப்படுத்த முயன்றனர்.
இருப்பினும் கட்சியினர் ஒரு சில பேருந்துகளில் தமிழ்நாடு எனும் ஸ்டிக்கரை ஒட்டினர். அதனைப் பிரித்தெறிந்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN