Enter your Email Address to subscribe to our newsletters

லக்னோ, 29 டிசம்பர் (ஹி.ச.)
இந்தியாவின் வடமாநிலங்களில் தற்போது கடும் குளிர் வாட்டி எடுத்து வருகிறது. பகல் நேரங்களிலும் அடர்த்தியான பனிமூட்டம் நிலவுகிறது.
அந்த வகையில், உத்தர பிரதேச மாநிலத்தில் நிலவி வரும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கிரேட்டர் நொய்டா, காசியாபாத், மதுரா உள்ளிட்ட நகரங்களில் அதிக பனிமூட்டம் காணப்படுகிறது.
இந்நிலையில், குளிர் அலை காரணமாக உத்தர பிரதேச மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதன்படி உத்தர பிரதேசத்தில் 12-ம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் வரும் 1- தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM