Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 3 டிசம்பர் (ஹி.ச.)
சென்னையில் நாளை
(டிச 04) நடைபெறும் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் மின்சாரத் துறை சார்ந்த குறைகளை தெரிவித்து நிவாரணம் பெறலாம்.
இது தொடர்பாக தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
அடையாறு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 4.12.2025 (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு செயற்பொறியாளர்/ இ&ப/அடையாறு, தரைதளம், வேளச்சேரி துணைமின் நிலைய வளாகம், வேளச்சேரி மெயின் ரோடு, வேளச்சேரி, சென்னை-42 என்ற விலாசத்தில் நடைபெற உள்ளது.
பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் மின்சாரத் துறை சார்ந்த குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என சென்னை தெற்கு மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b