இ-பைலின் முறையில் குறைபாடுகளை சரி செய்யக்கோரி இன்று முதல் நான்கு நாட்கள் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
கோவை, 3 டிசம்பர் (ஹி.ச.) இ-பைலின் முறையில் குறைபாடுகளை சரி செய்யக்கோரி இன்று முதல் நான்கு நாட்கள் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு இது குறித்து கோவை, வழக்கறிஞர்கள் சங்கம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், இ-பைலிங் குறைபாடுகள் வழக்கறிஞர் வெகு
Lawyers are boycotting courts for four days starting today, demanding fixes to flaws in the e-filing system.


கோவை, 3 டிசம்பர் (ஹி.ச.)

இ-பைலின் முறையில் குறைபாடுகளை சரி செய்யக்கோரி இன்று முதல் நான்கு நாட்கள் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

இது குறித்து கோவை, வழக்கறிஞர்கள் சங்கம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில்,

இ-பைலிங் குறைபாடுகள் வழக்கறிஞர் வெகுவாக வழக்கறிஞர்களை வெகுவாக பாதிக்கிறது.

அதை சரி செய்யும் வரை அனைத்து வழக்குகளுக்குமான கட்டாய இ-பைலின் முறையை அமல்படுத்தியதை திரும்பிப் பெற வேண்டும் என்றும், பொதுக்குழுவால் முடிவெடுக்கப்பட்டு உள்ளது.

இதன் அடிப்படையில் இன்று முதல் வருகிற 6 ம் தேதி வரை அனைத்து வழக்கறிஞர்களும் நீதிமன்ற பணிகளில் இருந்து விலகி இருப்பது என்றும் காணொளி காட்சி மூலமாகவும் நீதிமன்றங்களில் ஆஜராவதில்லை என்றும் முடிவு செய்யப்படுகிறது.

மேலும் இ-பைலிங் மூலம் எந்த வழக்கு மனுக்களும் தாக்கல் செய்யப் போவதில்லை என்றும், ஒருமனதாக பொது குழுவில் முடிவு எடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.

Hindusthan Samachar / V.srini Vasan