Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 3 டிசம்பர் (ஹி.ச.)
ஆந்திரா மாநிலம் தடா மாவட்டம் வரையாபாளையத்தை சேர்ந்தவர் நரேஷ்குர்லா (32). இவர் தனது தந்தை வேணு(55), மகன் சாதுர்யா(9), அதே பகுதியைச் சேர்ந்த முனி தேஜா (28) ஆகிய நான்கு பேரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு காரில் பயணித்துள்ளனர்.
அங்கு சுவாமி தரிசனம் செய்துவிட்டு அனைவரும் நேற்று (டிச.2) ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது காரை முனிதேஜா(28) என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி புறவழிச்சாலை அருகே வந்தபோது நிலைதடுமாறிய கார், சாலை ஓரத்தில் இருந்த தடுப்புச் சுவரில் மோதி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நரேஷ்குர்லா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காரில் பயணித்த மற்ற 3 பேர் படுகாயம் அடைந்ததால், 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே வேணு உயிரிழந்தார். படுகாயமடைந்த முனிதேஜா, சிறுவன் சாதுர்யா ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐயப்பன் கோயில் மற்றும் முருகன் கோயில்களுக்கு தற்போது நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து சென்று வருவதால் திண்டுக்கல் புறவழிச்சாலையில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு.
இதன் காரணமாக நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலையில் இருபுறங்களும் விபத்து ஏற்படாமல் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் எனவும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN