Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 3 டிசம்பர் (ஹி.ச.)
வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய வடதமிழகம், புதுச்சேரிகடலோரப்பகுதியில் நிலை கொண்டிருந்த டித்வா புயல் கடந்த 30-ம் தேதி வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. இது நேற்று (டிச 02) அடுத்தடுத்து வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக சென்னை அருகே நிலைகொண்டிருந்தது.
இது, சென்னை அருகே கரையை கடப்பதன் காரணமாக, சென்னை மற்றும் புறநகரில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் முதல் நேற்று இரவு வரை மிதமான மழை முதல் கனமழை வரை விட்டுவிட்டு பெய்தது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் இன்று (03.12.2025) காலை 07.00 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு சில இடங்களிலும் இன்று (03.12.2025) காலை 10 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதே போன்று அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி மற்றும் ராமநாதபுரம், நீலகிரி, கோயம்புத்தூர் (மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி), தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய 13 மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இன்று காலை 10 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b