எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜனவரி 4-ம் தேதி வீரபாண்டியில் பொதுக்கூட்டம் - அ தி மு க அறிவிப்பு!
சென்னை, 30 டிசம்பர் (ஹி.ச) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 4-1-2026 அன்று சேலம் மாவட்டம் வீரபாண்டியில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இது குறித்து அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதா
எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜனவரி 4-ந்தேதி வீரபாண்டியில் பொதுக்கூட்டம் - அதிமுக அறிவிப்பு


சென்னை, 30 டிசம்பர் (ஹி.ச)

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 4-1-2026 அன்று சேலம் மாவட்டம் வீரபாண்டியில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

இது குறித்து அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு சட்டமன்றத் தொகுதி வாரியாக, தொடர் பிரசார சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்துடனான எழுச்சிப் பயணத்தின் தொடர்ச்சியாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 4-1-2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சேலம் மாவட்டம் வீரபாண்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

5-1-2026 (திங்கட்கிழமை) அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிர் அணி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கிறார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b