ஹிங்கோலி பகுதியில் நிலநடுக்கம் - தேசிய நில அதிர்வு மையம் தகவல்
மும்பை, 30 டிசம்பர் (ஹி.ச.) இந்தியாவில் குறிப்பாக வடமாநிலங்களில் அவ்வப்போது சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் மராட்டிய மாநிலத்தின் ஹிங்கோலி பகுதியில் இன்று (டிசம்பர் 30) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஹிங்கோலி பகுதி
ஹிங்கோலி பகுதியில் நிலநடுக்கம் -  தேசிய நில அதிர்வு மையம் தகவல்


மும்பை, 30 டிசம்பர் (ஹி.ச.)

இந்தியாவில் குறிப்பாக வடமாநிலங்களில் அவ்வப்போது சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் மராட்டிய மாநிலத்தின் ஹிங்கோலி பகுதியில் இன்று (டிசம்பர் 30) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஹிங்கோலி பகுதியில் இன்று காலை 5.55 மணியளவில் ரிக்டர் அளவில் 3.5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 19.55 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 77.23 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.

Hindusthan Samachar / vidya.b