பொங்கல் பரிசு டோக்கன் - இல்லங்களுக்கு சென்று வழங்க வேண்டும் - கூட்டுறவுத்துறை உத்தரவு
சென்னை, 31 டிசம்பர் (ஹி.ச) பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் விநியோகம் ரேஷன் கடை ஊழியர்களுக்கு கூட்டுறவுத்துறை அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது ஜனவரி 2ம் தேதிக்குள் டோக்கன்கள் அச்சிடப்பட்டு விநியோகம் செய்திட ஏதுவாக தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்
Pongal


சென்னை, 31 டிசம்பர் (ஹி.ச)

பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் விநியோகம் ரேஷன் கடை ஊழியர்களுக்கு கூட்டுறவுத்துறை அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது

ஜனவரி 2ம் தேதிக்குள் டோக்கன்கள் அச்சிடப்பட்டு விநியோகம் செய்திட ஏதுவாக தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தபட்டுள்ளது

பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் துவங்கப்படும் தேதி தனியே அறிவிக்கப்படும்.

பொங்கல் தொகுப்பு பெற வேண்டிய நாள், நேரம் குறிப்பிட்டு டோக்கன்களை குடும்ப அட்டைதாரர்களின் இல்லங்களுக்குச் சென்று வழங்கவும் முற்பகல் 100 குடும்ப அட்டைதாரர்களுக்கும் பிற்பகல் 100 குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு விநியோகம் செய்திட டோக்கன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது

Hindusthan Samachar / P YUVARAJ