ஏவிஎம் சரவணன் மறைவுக்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரங்கல்
அமராவதி, 4 டிசம்பர் (ஹி.ச.) வயது மூப்பு மற்றும் உடல்நல பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருந்த பழம்பெரும் சினிமா தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் (86) இன்று (டிச.,04) காலமானார். இவரது மறைவிற்கு நடிகரும், ஆந்திர துணைமுதலமைச்சருமான பவன் கல்யாண் இரங்கல்
ஏவிஎம் சரவணன் மறைவுக்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரங்கல்


அமராவதி, 4 டிசம்பர் (ஹி.ச.)

வயது மூப்பு மற்றும் உடல்நல பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருந்த பழம்பெரும் சினிமா தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் (86) இன்று (டிச.,04) காலமானார்.

இவரது மறைவிற்கு நடிகரும், ஆந்திர துணைமுதலமைச்சருமான பவன் கல்யாண் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பவன் கல்யாண் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,

பழம்பெரும் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் காலமானார் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்தியத் திரைப்படத் துறையில் நீண்ட வரலாற்றைக் கொண்ட ஏ.வி.எம். நிறுவனத்தை சரவணன் திறமையாக நடத்தினார்.

சிரஞ்சீவியுடன் தயாரிக்கப்பட்ட புன்னமி நாகு திரைப்படம், தலைமுறை இடைவெளியைப் பொருட்படுத்தாமல் இன்றும் பார்வையாளர்களைக் கவர்ந்து வருகிறது. சம்சாரம் ஓக சதுரங்கம், ஆ ஒகடி அடக்கு, லீடர், மெருபு கலலு, சிவாஜி போன்ற படங்கள் பார்வையாளர்களைக் கவர்ந்தன. சரவணன் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b