முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசின் அனுமதி பெற 19 மாதங்கள் ஆனது ஏன்? -புலன் விசாரணை அதிகாரிகள் விளக்கம்
சென்னை, 4 டிசம்பர் (ஹி.ச) முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசின் அனுமதி பெற 19 மாதங்கள் ஆனது ஏன்? என புலன் விசாரணை அதிகாரிகள்
Spvelumani


High


சென்னை, 4 டிசம்பர் (ஹி.ச)

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசின் அனுமதி பெற 19 மாதங்கள் ஆனது ஏன்? என புலன் விசாரணை அதிகாரிகள் மயில்வாகனன், விமலா, டாங்கரே தரப்பில் விளக்கம் அளித்து உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்

மனுக்கள் தொடர்பாக அறப்போர் இயக்கம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணை வருக் 15ம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சிகளில் டெண்டர் ஒதுக்கியதில், 98 கோடியே 25 லட்சம் ரூபாய் முறைகேடுகள் நடந்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் லஞ்ச ஒழிப்பு துறைக்கு எதிராக, அறப்போர் இயக்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ