மழையின் காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
சென்னை, 4 டிசம்பர் (ஹி.ச.) வங்கக்கடலில் உருவாகியுள்ள டித்வா புயலால், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருக
மழையின் காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு


சென்னை, 4 டிசம்பர் (ஹி.ச.)

வங்கக்கடலில் உருவாகியுள்ள டித்வா புயலால், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இன்று (டிச 04) சென்னை, திருவள்ளுவர் உள்ளிட்ட தமிழகத்தின் 12 மாவட்டங்களின் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையின் பெரும்பாலுமான பகுதிகளில் மழை காரணமாக கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.சென்னை மாநகராட்சி சார்பில் தொடர்ச்சியாக மோட்டார் பம்புகள் மூலம் மழைநீரை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செங்குன்றம், ஆவடி சுற்றுவட்டாரங்களில் 2 ஆயிரத்து 500 வீடுகளை மழைநீர் சூழ்ந்தது.

3 நாட்களாக தொடரும் மழையால் இயல்புநிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டித்வா புயல் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று ஒருநள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b