தமிழக அரசின் ஆன்மிக சுற்றுலா பயண திட்டம் நாகை,மயிலாடுதுறையில் இன்று தொடக்கம்
நாகை, 4 டிசம்பர் (ஹி.ச.) ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ள, ஏழை எளிய முதியோர்களுக்காக ராமேஸ்வரம்-காசி இலவச ஆன்மிக சுற்றுலா திட்டத்தை செயல்படுத்தி வரும் தமிழக அரசு மண்டலம் வாரியாக இதற்கான விண்ணப்பங்கள் பெற்று பயனாளிகளை தேர்வு செய்கிறது. அவ்வகையில் 2
தமிழக அரசின் ஆன்மிக சுற்றுலா பயண திட்டம் நாகை,மயிலாடுதுறையில்  இன்று தொடக்கம்


நாகை, 4 டிசம்பர் (ஹி.ச.)

ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ள, ஏழை எளிய முதியோர்களுக்காக ராமேஸ்வரம்-காசி இலவச ஆன்மிக சுற்றுலா திட்டத்தை செயல்படுத்தி வரும் தமிழக அரசு மண்டலம் வாரியாக இதற்கான விண்ணப்பங்கள் பெற்று பயனாளிகளை தேர்வு செய்கிறது.

அவ்வகையில் 2025-2026-ம் ஆண்டின் ஆன்மிக சுற்றுலாவிற்காக நாகை மண்டலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பக்தர்கள் இன்று (டிச 04) பயணத்தை தொடங்கினர். இந்து சமய அறநிலைத்துறை நாகை மண்டல இணை ஆணையர் குமரேசன் கொடியசைத்து பயணத்தை தொடங்கி வைத்தார்.

இதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பக்தர்களின் ஆன்மிக பயண தொடக்க நிகழ்ச்சியும் இன்று நடைபெற்றது.

மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட யாத்திரையை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரவிச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இன்று புறப்பட்ட பக்தர்கள் வேன் மூலம் ராமேஸ்வரம் வரை அழைத்து செல்லப்படுகின்றனர். பின்னர் அங்கிருந்து ரெயிலில் காசிக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b