Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 5 டிசம்பர் (ஹி.ச.)
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தூணில் தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் கடந்த 1 ஆம் தேதி உத்தரவிட்டார். ஆனால், உத்தரவுப்படி தீபத்தூணில் தீபம் நேற்றைய தினம் ஏற்றவில்லை. இதனை கண்டித்து பாஜகவினர் மற்றும் பல்வேறு இந்து அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், திருப்பரங்குன்றத்தில் இன்று (டிச 05) போராட்டம் நடத்த பாஜக அழைப்பு விடுத்திருந்தது. திருப்பரங்குன்றம் வீதிகளில் பேரணியாக சென்று கடைகளை அடைக்க வேண்டாம் என திமுக கூட்டணி கட்சியினர் பிரச்சாரம் செய்தனர்.
பாஜக, இந்து அமைப்புகள் சார்பில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றவிடாமல் தடுத்த திமுக அரசுக்கு எதிராக கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் திருப்பரங்குன்றத்தில் இன்று கடைகள் வழக்கம்போல் செயல்படுகின்றன.
போராட்டத்துக்கு விடுத்த அழைப்பை மக்கள் புறக்கணித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b