சென்னை ஜிஎஸ்டி ஆணையாளர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து
சென்னை, 7 டிசம்பர் (ஹி.ச.) சென்னை அண்ணாநகரில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி. ஆணையர் அலுவலகம் இயங்கி வருகின்றது. இந்த அலுவலகத்தில் இன்று (டிச 07) காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட
சென்னை ஜிஎஸ்டி ஆணையாளர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து


சென்னை, 7 டிசம்பர் (ஹி.ச.)

சென்னை அண்ணாநகரில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி. ஆணையர் அலுவலகம் இயங்கி வருகின்றது. இந்த அலுவலகத்தில் இன்று (டிச 07) காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலறிந்து 6 வாகனங்களில் விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசாரும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b