Enter your Email Address to subscribe to our newsletters

திருவாரூர், 7 டிசம்பர் (ஹி.ச.)
திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நோக்கி சென்ற அரசு பேருந்தும், மன்னார்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு வந்த தனியார் பேருந்தும் மன்னார்குடி கோட்டூர் பகுதியில் உள்ள வளைவில் இன்று (டிச 07) நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு திருத்துறைப்பூண்டி, திருவாரூர் அரசு மருத்துவமனைகளில்
சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விபத்தில் இரண்டு பேருந்துகளின் முன்பகுதியும் நொறுங்கி பலத்த சேதம் அடைந்தன.
குறிப்பாக இரு பேருந்துகளின் பக்கவாட்டு பகுதிகளும் சிதைந்து அவற்றின் ஓரம் இருந்த பயணிகள் காயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மன்னார்குடி போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Hindusthan Samachar / P YUVARAJ