Enter your Email Address to subscribe to our newsletters

ராய்ப்பூர், 8 டிசம்பர் (ஹி.ச.)
2026 ஆம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நாட்டில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது. சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம், தெலுங்கானா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது.
இப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டோ, சரண் அடைந்தோ வருகின்றனர். இவ்வாறு சரண் அடையும் மாவோயிஸ்டுகளுக்கு மாநில அரசுகள் மறுவாழ்வு திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்த 12 நக்சலைட்டுகள் இன்று (டிச 08) ஆயுதங்களை கைவிட்டு போலீசில் சரணடைந்துள்ளனர். அம்மாநிலத்தின் கைராகர் சுய்காடன் கண்டாய் மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 12 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளனர்.
சரணடைந்தவர்களில் ரமந்ஹர் மாஜி என்ற நக்சலைட்டின் தலைக்கு ரூ. 1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b