இன்றும் இண்டிகோ விமான தாமதங்கள் தொடரும் என பயணிகளுக்கு டில்லி விமான நிலையம் எச்சரிக்கை
புதுடெல்லி, 8 டிசம்பர் (ஹி.ச.) இண்டிகோ விமானங்கள் சேவை இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. நாடு முழுவதும் பல விமான நிலையங்களில் இன்றும் (டிசம்பர் 8) தாமதங்கள் மற்றும் ரத்து செய்தல்கள் தொடர்ந்தன. நாடு இதுவரை சந்திக்காத அளவிலான விமானப் பயண
இன்றும் இண்டிகோ விமான தாமதங்கள்  தொடரும் என பயணிகளுக்கு டில்லி விமான நிலையம் எச்சரிக்கை


புதுடெல்லி, 8 டிசம்பர் (ஹி.ச.)

இண்டிகோ விமானங்கள் சேவை இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை.

நாடு முழுவதும் பல விமான நிலையங்களில் இன்றும் (டிசம்பர் 8) தாமதங்கள் மற்றும் ரத்து செய்தல்கள் தொடர்ந்தன.

நாடு இதுவரை சந்திக்காத அளவிலான விமானப் பயண நெருக்கடியின் 7வது நாளாகும்.

இது தொடர்பாக, இன்று (டிசம்பர் 8) டில்லி விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இண்டிகோ விமானங்கள் தொடர்ந்து தாமதங்களை சந்திக்கக்கூடும். எந்தவொரு சிரமத்தையும் தவிர்க்க விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் பயணிகள் தங்கள் விமான நிறுவனத்துடன் சமீபத்திய விமான சேவை கால அட்டவணையை https://www.newdelhiairport.in/ என்ற இணையதளத்தில் சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இடையூறுகளைக் குறைப்பதற்கும், சுமூகமான பயண அனுபவத்தை உறுதி செய்வதற்கும், டில்லி விமான நிலைய அதிகாரிகள் பணியாற்றி வருகின்றன. விமான நிலையத்திற்குச் சென்று பயணிகள் திரும்புவதற்கு மெட்ரோ, பஸ்கள் உள்ளிட்ட வசதிகள் கூடுதலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இண்டிகோ விமான நிறுவனம் இதுவரை ரூ.610 கோடி மதிப்பிலான டிக்கெட்டுகளைத் திரும்பப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / JANAKI RAM