மன அழுத்தத்தில் சிறப்பு காவல் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை!
திருவள்ளூர், 10 ஜனவரி (ஹி.ச.) திருவள்ளூர் ஆர்.கே.பேட்டை அருகே அம்மையார் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரன் (59). அவருக்கு மனைவி ஜெயந்தி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இரண்டு மகன்களும் தற்போது சென்னையில் காவல் துறையில் பணியில் உள்ளனர்
Death


திருவள்ளூர், 10 ஜனவரி (ஹி.ச.)

திருவள்ளூர் ஆர்.கே.பேட்டை அருகே அம்மையார் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரன் (59). அவருக்கு மனைவி ஜெயந்தி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இரண்டு மகன்களும் தற்போது சென்னையில் காவல் துறையில் பணியில் உள்ளனர். சிறுவயதில் பெற்றோரை இழந்த குமரனை அவரது சித்தி வேதவள்ளி வளர்த்துப் பராமரித்து வந்துள்ளார்.

நன்றாக படிக்க வைத்து, காவல் துறையில் வேலை கிடைக்க வழிசெய்துள்ளார். ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இதனால் குமரன் சித்தியிடம் அளவில்லாத பாசத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, நான்கு நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் வேதவள்ளி மரணமடைந்தார். அவரது இழப்பு குமரனை மனரீதியாக மிகவும் பாதித்ததாக தெரிகிறது. இந்நிலையில், வழக்கம்போல் குமரன் தன் கடமைகளை ஆர்.கே.பேட்டை போலீஸ் நிலையத்தில் செய்தார். பிறகு இரவு 9 மணியளவில் வீடு திரும்பினார்.

தொடர்ந்து, மன அழுத்தத்தில் இருந்த அவர், அன்று நள்ளிரவில் தனது வீட்டில் உள்ள அறைக்குச் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

.இதைக் கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சியில் மூழ்கினர். தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டனர். பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

சித்தியை இழந்த துயரத்தால் குமரன் உயிரை மாய்த்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் ஆர்.கே.பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார மக்களிடையே மிகுந்த துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN