Enter your Email Address to subscribe to our newsletters

சபரிமலை, 10 ஜனவரி (ஹி.ச.)
மகரவிளக்கு உற்சவ காலம் நிறைவடைய சில நாட்களே உள்ளதால் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் எருமேலியில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
மலையேறும் பக்தர்கள் சாமி தரிசனம் முடித்த பிறகும் இரண்டு நாட்கள் வரை சன்னிதானத்திலேயே தங்குவதால், சன்னிதானத்தில் கூட்டம் அதிகரித்திருப்பதுடன், புதிதாக சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களும் மலையேறி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பனை காண கட்டுக்டங்காத கூட்டம் கூடியுள்ளதால் பக்தர்கள் சுமார் 12 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, 18ஆம் படி ஏறுவதற்கு நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருப்பதால் பம்பையிலேயே காவலர்கள் தடுத்து நிறுத்தி கொஞ்சம் கொஞ்சமாக பக்தர்களை அனுப்பி வருகின்றனர். மகரவிளக்கு நாளான ஜனவரி 14 அன்று நேரடி முன் பதிவு மற்றும் ஆன்லைன் மூலம் 30 ஆயிரம் பேர் என மொத்தம் 35,000 பேர் மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
ஜனவரி 19-ம் தேதி இரவு வரை மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்களுக்கான கட்டுப்பாட்டை மேலும் அதிகரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam