ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை விண்ணில் பாய தயாராக இருக்கும் பி.எஸ்.எல்.வி. சி-62 - கவுண்ட்டவுன் இன்று தொடக்கம்
ஸ்ரீஹரிகோட்டா, 11 ஜனவரி (ஹி.ச.) ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை (திங்கட்கிழமை) விண்ணில் பாய தயாராக இருக்கும் பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட்டுக்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.17 மணிக்கு தொடங்குகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹ
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை விண்ணில் பாய தயாராக இருக்கும் பி.எஸ்.எல்.வி. சி-62 - கவுண்ட்டவுன் இன்று தொடக்கம்


ஸ்ரீஹரிகோட்டா, 11 ஜனவரி (ஹி.ச.)

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை (திங்கட்கிழமை) விண்ணில் பாய தயாராக இருக்கும் பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட்டுக்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.17 மணிக்கு தொடங்குகிறது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை (திங்கட்கிழமை) காலை 10.17 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. -சி62 விண்ணில் ஏவப்படுகிறது.

இது புத்தாண்டில் இஸ்ரோ ஏவும் முதல் ராக்கெட்டாகும்.

இதில், மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.) சேவைக்காக இ.ஓ.எஸ். என்-1 என்ற செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதன்மை செயற்கைக்கோளான இதனுடன் ஸ்பானிஷ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 'கெஸ்ட்ரல் இனிஷியல் டெமான்ஸ்ட்ரேட்டர்' என்ற ஒரு சிறிய சோதனை கருவியும் பொருத்தப்பட்டுள்ளது.

இதனுடன், இந்தியா, மொரீஷியஸ், லக்சம்பர்க், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும் உள்ள நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் 17 வணிக செயற்கைக்கோள்களும் இதனுடன் விண்ணுக்கு ஏவப்படுகிறது.

இந்த பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான கவுண்ட்டவுன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.12 மணிக்கு தொடங்குகிறது.

ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களின் ஒருங்கிணைப்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. ஏவுதலுக்கு முந்தைய சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / JANAKI RAM