Enter your Email Address to subscribe to our newsletters

ராமேஸ்வரம், 13 ஜனவரி (ஹி.ச.)
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ஒரு படகையும் 8 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர்.
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை நெடுந்தீவு கடற்படை முகாமுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் அவ்வப்போது சிறை பிடித்து வருவதோடு அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கச்சத் தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சுற்றி வளைத்தனர்.
இதில் ஒரு படகையும் அதில் மீன்பிடித்துக் கொண்டிருந்த எட்டு மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து நெடுந்தீவு கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் அந்த எட்டு மீனவர்களும் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam