Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 ஜனவரி (ஹி.ச.)
தினேஷ் கலைச்செல்வன் எழுதி இயக்கிய இந்த காடு சார்ந்த ஆக்ஷன் த்ரில்லர் படம்,
'மகாசேனா,
இயற்கை, ஆன்மிகம் மற்றும் காட்டு புராணங்களை ஒன்றிணைத்து, தெய்வீக இயற்கை சக்திகளுக்கும் மனித பேராசைக்கும் இடையிலான மோதலை வலுவான கதையாக்கமாக முன் வைக்கிறது.
கூடலூர், வயநாடு, கொல்லிமலை, ஊட்டி ஆகிய பகுதிகளில் உள்ள இயற்கையான காடுகளில் பெரும்பாலும் படமாக்கப்பட்ட இந்த படம், கண்ணைக் கவரும் காட்சிகளும் ஆழமான உணர்ச்சிகளும் நிறைந்த அனுபவத்தை வழங்குகிறது.
இந்தத் திரைப்படத்தில் விமல், ஸ்ருஷ்டி டாங்கே, யோகி பாபு, மகிமா குப்தா, ஜான் விஜய், கபீர் துகான் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மேலும், சேனா என்ற யானை, படத்தில் முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது. இசையை A. பிரவீன் குமார் மற்றும் உதய் பிரகாஷ் (UPR) அமைத்துள்ளனர்.
ஓடிடி வெளியீட்டின் மூலம், மகாசேனா மேலும் அதிக பார்வையாளர் வட்டத்தை அடையவுள்ளது.
ஆக்ஷன், நம்பிக்கை மற்றும் இயற்கையை மையமாகக் கொண்ட ஒரு சக்திவாய்ந்த சினிமா பயணத்தை கொடுக்கும் என்று பார்வையாளர்களுக்கு இந்த படம் உறுதி அளிக்கிறது.
Hindusthan Samachar / Durai.J