டெல்லியில் நிலவும் கடும் குளிர் - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
புதுடெல்லி, 13 ஜனவரி (ஹி.ச.) உத்​தரபிரதேசம், பஞ்​சாப், ஹரி​யானா உட்பட வட மாநிலங்​கள் முழு​வதும் அடுத்த 3 நாட்​களுக்கு கடுமை​யான குளிர் அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. அதன்படி டெல்லியில் கடுமையான குளிர்ச்சி நிலவுகி
டெல்லியில் நிலவும் கடும் குளிர் - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


புதுடெல்லி, 13 ஜனவரி (ஹி.ச.)

உத்​தரபிரதேசம், பஞ்​சாப், ஹரி​யானா உட்பட வட மாநிலங்​கள் முழு​வதும் அடுத்த 3 நாட்​களுக்கு கடுமை​யான குளிர் அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம்

தெரி​வித்​துள்​ளது.

அதன்படி டெல்லியில் கடுமையான குளிர்ச்சி நிலவுகிறது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் குறைந்தபட்ச வெப்பநிலை நேற்று

(ஜனவரி 12) 3 டிகிரியாக பதிவாகி இருந்த நிலையில் இன்று (ஜனவரி 13) காலை 4 டிகிரி என்ற அளவில் உள்ளது.

ஆயாநகர் பகுதியில் நேற்று குறைந்தபட்ச வெப்பநிலை 2.9 டிகிரியாக பதிவாகி இருந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. கடந்த ஞாயிறன்று இரவில் பல்வேறு இடங்களிலும் குளிர் அலை பரவியது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டது.

பாலம் நகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரியாக பதிவாகியது. சப்தர்ஜங் நகரில் 4.8 டிகிரியாக பதிவாகி இருந்தது. அது இன்றிரவு 3 டிகிரியாக இருக்கும் என தகவல் தெரிவிக்கின்றது. இதேபோன்று ரிட்ஜ் ஸ்டேசன் பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை 3.7 டிகிரியாகவும், அதிகபட்ச வெப்பநிலை 18.8 டிகிரியாகவும் இருந்தது.

டெல்லியில் காற்றின் தரமும் கூட மோசமடைந்து உள்ளது. இதன்படி, ஒட்டுமொத்த அளவில் டெல்லியில் காற்று தர குறியீடு 337 ஆக உள்ளது என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது.

பஞ்​சாப், ஹரி​யா​னா, ராஜஸ்​தான், பிஹார் மற்​றும் ம.பி.​யின் சில பகு​தி​களில் மக்​கள் குளிரில்

நடுங்​கிக்கொண்​டுள்​ளனர். இமாச்சல பிரதேசம் மற்​றும்

உத்​த​ராகண்​டிலும் கடுமை​யான குளிர் நில​வு​கிறது.

சில இடங்​களில் உறைபனி​யும் காணப்​படு​கிறது. உறை

பனி​யுடன் கூடிய கடும் குளிர் காரண​மாக வட மாநிலங்​களின் வி​மானங்​கள் மற்​றும் ரயில் சேவை​களில்​ தொடர்ந்​து தாமதம்​ ஏற்​பட்​டு வரு​கிறது.

Hindusthan Samachar / vidya.b