தொழில் உரிமத்தை 3 மாதத்துக்கு முன்பே புதுப்பிக்க வேண்டும் - வணிகர்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்
சென்னை, 14 ஜனவரி (ஹி.ச.) சென்னை மாநகராட்சியில் தொழில் உரிமத்தை 3 மாதத்துக்கு முன்பே புதுப்பிக்க வணிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட
தொழில் உரிமத்தை 3 மாதத்துக்கு முன்பே புதுப்பிக்க வேண்டும் - வணிகர்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்


சென்னை, 14 ஜனவரி (ஹி.ச.)

சென்னை மாநகராட்சியில் தொழில் உரிமத்தை 3 மாதத்துக்கு முன்பே புதுப்பிக்க வணிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வர்த்தகம் செய்வதற்கு, பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி வணிகர்கள், மாநகராட்சியிடம் இருந்து தொழில் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

அந்த உரிமத்தை உரிமைக்காலம் முடிவடைவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே தவறாமல் புதுப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

https://chennaicorporation.gov.in/gcc/online-services/trade-licence என்ற இணையதளத்தில் தொழில் உரிமத்தை உரிய கட்டணம் செலுத்தி புதுப்பித்துக்கொள்ளலாம்.

அதேபோல் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகம் மூலமாகவும், அனைத்து இ-சேவை மையங்கள் மூலமாகவும் புதுப்பித்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. உரிமம் புதுப்பித்தலுக்கு நிலுவையின்றி தொழில்வரி செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஏற்கெனவே பெறப்பட்ட தொழில் உரிமத்தின் நகல், தொழில் உரிமக் கட்டணம் ஆகியவற்றின் ஆவணங்கள் போதுமானது. கூடுதல் விவரங்களுக்கு 044-25619305 என்ற தொலைபேசி எண்ணையும், ro@chennaicorporation.gov.in மற்றும் arohqpt@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியையும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b