பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்பட இருந்த 5 சிறப்பு ரெயில்கள், பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் முழுவதுமாக ரத்து
சென்னை, 15 ஜனவரி (ஹி.ச.) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்பட இருந்த 5 சிறப்பு ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- பயணிகளிடம் போதிய வரவேற்பு இல
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்பட இருந்த 5 சிறப்பு ரெயில்கள், பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் முழுவதுமாக ரத்து


சென்னை, 15 ஜனவரி (ஹி.ச.)

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்பட இருந்த 5 சிறப்பு ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால், 5 பொங்கல் பண்டிகை சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் 19-ந்தேதி மாலை 3.30 மணிக்கு இயக்கப்பட இருந்த சிறப்பு ரெயில் (வண்டி எண் 06011), தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு 21-ந்தேதி மதியம் 12.30 மணிக்கு இயக்கப்பட இருந்த சிறப்பு ரெயில் (06053), சென்னை சென்டிரலில் இருந்து கோவைக்கு வரும் 19-ந்தேதி இரவு 11.25 மணிக்கு இயக்கப்பட இருந்த சிறப்பு ரெயில் (06033), போத்தனூரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு 21-ந்தேதி இரவு 12.35 மணிக்கு இயக்கப்பட இருந்த சிறப்பு ரெயில் (06024), சென்னை சென்டிரலில் இருந்து போத்தனூருக்கு 21-ந்தேதி மதியம் 1.50 மணிக்கு இயக்கப்பட இருந்த சிறப்பு ரெயில் (06023) ஆகியவை முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM