நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு ஜனவரி 18-ம் தேதி சிறப்பு ரெயில் இயக்கம்
சென்னை, 15 ஜனவரி (ஹி.ச.) பொங்கல் பண்டிகைக்கு சென்றவர்கள் திரும்புவதற்கு வசதியாக நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு வருகிற 18-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1 மணிக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06178) இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில் மறுந
பொங்கலுக்கு சென்றவர்கள் திரும்ப வசதியாக நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு 18-ம் தேதி சிறப்பு ரெயில் இயக்கம்


சென்னை, 15 ஜனவரி (ஹி.ச.)

பொங்கல் பண்டிகைக்கு சென்றவர்கள் திரும்புவதற்கு வசதியாக நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு வருகிற 18-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1 மணிக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06178) இயக்கப்படுகிறது.

இந்த சிறப்பு ரெயில் மறுநாள் காலை 3 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

நெல்லையில் இருந்து புறப்படும் இந்த ரெயில் சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், பாம்புகோவில் சந்தை, சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர், திருமங்கலம், மதுரை, சோழவந்தான், கொடை ரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b