டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ரூ.111.96 கோடி நிவாரணம் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, 15 ஜனவரி (ஹி.ச.) கடந்தாண்டு வடகிழக்கு பருவமழையின் போது வங்கக் கடலில் உருவான டித்வா புயலால் தமிழக கடலோர மாவட்டங்கள், காவிரிப்படுகை மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் ஆகிய பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. மேலும் தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ரூ.111.96 கோடி நிவாரணம் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு


சென்னை, 15 ஜனவரி (ஹி.ச.)

கடந்தாண்டு வடகிழக்கு பருவமழையின் போது வங்கக் கடலில் உருவான டித்வா புயலால் தமிழக கடலோர மாவட்டங்கள், காவிரிப்படுகை மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் ஆகிய பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. மேலும் தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் ஏக்கர் கணக்கில் விவசாய நிலம் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணத் தொகையை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

2025-2026ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவத்தில் பெய்த கனமழை மற்றும் டித்வா புயலின் காரணமாக 1.39 இலட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வேளாண் மற்றும் தோட்டக்கலைப்பயிர்கள் பாதிக்கப்பட்டன.

இதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பிலிருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 01.12.25 அன்று ஆய்வு கூட்டம் நடத்தி பயிர் பாதிப்படைந்த மாவட்டங்களில் வருவாய் மற்றும் வேளாண்மைத்துறை மேற்கொள்ளப்படவேண்டும் உடனடியாக என்றும் கணக்கெடுப்பு நெல் பணி உள்ளிட்ட இறவைப்பயிர்களுக்கு நிவாரணத் தொகையாக எக்டருக்கு ரூ.20,000/-ஆகவும் வழங்க உத்தரவிட்டார்.

இவ்வுத்தரவின்படி, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 33 சதவீதத்திற்கும் அதிகமாக பாதிக்கப்பட்ட பயிர் பரப்பு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து கருத்து பெறப்பட்டது.

டித்வா புயல் மற்றும் வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலைப்பயிர்களுக்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.111.96 கோடி நிவராணத்தொகை ஒப்பளிப்பு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின்பேரில் அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே 2024 நவம்பர் மற்றும் டிசம்பர் மாத வடகிழக்குப் பருவமழை மற்றும் 2025 ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறிய மழையினால் 5.66 இலட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வேளாண் மற்றும் தோட்டக்கலைப்பயிர்கள் பாதிக்கப்பட்டதற்கு 3.60 இலட்சம் விவசாயிகள் பயன் பெறும் வகையில் ரூ.289.63 கோடி நிவாரணத்தொகை 2025 டிசம்பர் மாதம் ஒப்பளிப்பு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில் அரசாணை வெளியிடப்பட்டு நிவாரணத்தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b