Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஜனவரி (ஹி.ச)
சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் பாஜக நிர்வாகிகளோடு மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் பொங்கல் வைத்து விழாவை கொண்டாடினர்.
தொடர்ந்து பாஜக மகளிர் அணியினரோடு , மோடி பொங்கல், என்டிஏ பொங்கல், என்று முழங்கியபடி தமிழிசை செளந்தரராஜன் நடனமாடினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
உலகத் தமிழர் அனைவருக்கும் தைத்திருநாள் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள், நேற்றைய தினம் டெல்லியில் தமிழர்களின் பாரம்பரியமான பொங்கல் விழாவில் பிரதமர் மோடி கொண்டாடி வாழ்த்து தெரிவித்தார்.
நேற்று முன்தினம் டெல்லியில் நடந்த பொங்கல் விழாவில் பராசக்தி பட குழுவும் பங்கேற்றது, பராசக்தி படத்தில் காங்கிரசின் கோர முகத்தை காண்பித்திருப்பது வரவேற்கத்தக்கது.
பராசக்தி படக்குழு வந்தது பாஜகவிற்கு மேலும் மேலும் சக்தியை வலுப்படுத்தி உள்ளது விஜய் நடிகராக இருந்திருந்தால் அவரையும் கூப்பிட்டு இருப்போம்.
ஏற்கனவே விஜய் ரசிகர்கள் கூறிவிட்டார்கள் ஜனநாயகன்புடன் வந்தால் தான் எங்களுக்கு பொங்கல் என்று அப்போது அவர்களுடன் சேர்ந்து நாமும் பொங்கலை கொண்டாடுவோம்.
தமிழ் புத்தாண்டு சித்திரை ஒன்று தான் விஜய்க்கு யாரோ மாற்றி கூறி விட்டார்கள், விமர்சித்தார் தமிழிசை சவுந்தர்ராஜன்.
திருவள்ளுவர் தினத்திற்கு முன்கூட்டியே அமித்ஷா வாழ்த்து கூறியது அவர்களுக்கு பிரச்சனை அல்ல திருவள்ளுவரை அவர்கள் கையில் எடுத்து விட்டார்களே என்பதுதான் அவர்களுக்கு பிரச்சனை.
ஆர்.எஸ்.பாரதி தெளிவாக கூறிவிட்டார் பராசக்தி படத்தில் வந்த காங்கிரஸ் கட்சி வேறெனறும் தற்போது இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சி வேறு எனறும் கூறினார் கூட்டணிக்காக எப்படி எல்லாம் பேசுகிறார்கள் என்று பாருங்கள்.
தலை நிமிருகிறது தமிழகம் என்ற கல்வி நிகழ்ச்சிகளும் பெண்களுக்கான நிகழ்ச்சிகளில் தமிழக அரசு கூப்பிடும்பொழுது அப்போது யாரும் கேட்க மாட்டார்கள் ஆனால் பாஜக அழைத்தால் மட்டும் பிரச்சனை.
தமிழ் திரை கலைஞர்களுக்கு டெல்லியில் மரியாதை கொடுக்கப்பட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும், பிரதமர் மோடி தமிழ் திரை கலைஞர்களுடன் பொங்கல் வைத்தார் என்பது பார்க்க வேண்டும்.
என்னுடைய திருமணத்தில் கூட முன்னாள் முதலமைச்சர் கலைஞர் போராடிக் கொண்டிருக்க கூடிய நேரத்தில் தமிழிசை என பெயர் வைத்ததை சுட்டி காட்டினார்.
தயாநிதி மாறன் எப்போது புதிய கல்விக் கல்விக் கொள்கைகளைப் பற்றி பேசும்போதெல்லாம் வட மாநில பெண்களை கொச்சைப்படுத்துகிறார், மகாராஷ்டிராவில் தமிழ் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
தை பிறந்தால் வழி பிறக்கும் ஆனால் சித்திரை 1 தான் தமிழ் புத்தாண்டு , விஜய் அவர்கள் தை மாத பிறப்பை தமிழ் புத்தாண்டு எனக் கூறுவது தேர்தல் காரணத்திற்காக கூட இருக்கலாம். ஜனநாயகன் சிபிஐ என விஜய் விவகாரத்தில் என்ன நடந்தாலும் காரணமாக பிரதமர் மோடியை முன்னிலைப்படுத்தி பேசுவது தவறானது.
தேர்தல் நெருங்க நெருங்க திமுக பதட்டத்தோடு பேசுகிறார்கள்.
முதலமைச்சர் ஸ்டாலின் , துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முரணான கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
புதிய கல்விக் கொள்கையை எப்படி இந்தி திணிப்பக உதயநிதியால் பேச முடியும்.
இந்தி திணிப்பு இலங்கை தமிழர் படுகொலை ஆகியவை எந்த காங்கிரஸ் எந்த திமுக செய்தது.
மோடி பொங்கல் விழாவில் பராசக்தி குழுவினர் டெல்லியில் கலந்து கொண்டது தொடர்பாக எம்பி மாணிக்கம் தாகூர் விமர்சனத்திற்கு வங்கி குழுவோடு பராசக்தி குழு இணையவில்லை தமிழகமே இணைய உள்ளது.
பிரதமர் மோடி தமிழ் மக்களை எவ்வளவு நேசிக்கிறார் என்பது நேற்றைய பொங்கல் விழாவில் தெரிந்தது.
தேர்தல் ஆதாயத்திற்காக ராகுல் காந்தி மோடியின் மீது விமர்சனம் செய்கிறார்.
அதிகாரப்பூர்வமான தமிழ் புத்தாண்டு என்றால் சித்திரை ஒன்று தன் அது அனைவருக்கும் தெரியும் தை பிறந்தால் வழி பிறக்கும் என்கின்ற நோக்கோடு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்திருப்பார் என கூறினார்.
Hindusthan Samachar / P YUVARAJ