Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 ஜனவரி (ஹி.ச)
தமிழகம் - மேற்கு வங்கம் இடையே புதிதாக 3 அம்ரித் பாரத் ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இதனை தொடர்ந்து மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்குரி - திருச்சி, தாம்பரம் - சந்திரகாச்சி, நாகர்கோவில் - ஜல்பாய்குரி இடையே அம்ரித் பாரத் ரெயில்கள் இயக்கப்பட இருக்கிறது.
இந்நிலையில், அம்ரித் பாரத் ரெயில்கள் புறப்படும் நேரத்தை ரெயில்வே வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது,
1. ஜல்பாய்குரியில் இருந்து திருச்சி செல்லும் அம்ரித் பாரத் ரெயில் (வண்டி எண்: 02609) வருகிற ஜனவரி 17ம் தேதி மதியம் 1.45 மணிக்கு ஜல்பாய்குரியில் இருந்து புறப்பட்டு, மூன்றாவது நாள் மதியம் 2.15 மணிக்கு திருச்சி வந்து சேரும். ஜல்பாய்குரி - திருச்சி இடையிலான அம்ரித் பாரத் ரெயில் தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், எழும்பூர் வழியாக இயக்கப்படும்.
2. சந்திரகாச்சியில் இருந்து தாம்பரம் செல்லும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 06108) வருகிற 18ம் தேதி மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் மாலை 6.45 மணிக்கு தாம்பரம் வந்து சேரும். சந்திரகாச்சி தாம்பரம் இடையிலான அம்ரித் பாரத் ரெயிலானது எழும்பூர், சூலூர்பேட்டை, நெல்லூர் வழியாக இயக்கப்படும்.
3. ஜல்பாய்குரியில் இருந்து நாகர்கோவில் செல்லும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 02603) வருகிற 17ம் தேதி மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு, மூன்றாவது நாள் மாலை 7.15 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும். ஜல்பாய்குரி-நாகர்கோவில் இடையிலான அம்ரித் பாரத் ரெயிலானது காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, திண்டுக்கல், மதுரை வழியாக இயக்கப்படும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அம்ரித் பாரத் ரெயிலில் ஒரே நேரத்தில் 1,834 பேர் வரையில் பயணிக்கலாம். கண்காணிப்பு கேமரா, தகவல் தொடர்பு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.
இந்த மூன்று ரெயில்களும் தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் நேரம் தற்போது வரை அறிவிக்கப்படவில்லை. விரையில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b