உள்நாட்டு கலவரம் நடந்து வரும் ஈரானில் சிக்கியுள்ள முதல்‌ இந்திய குழுவினர்‌ இன்று இந்தியா அழைத்து வரப்படுவர்‌ - மத்திய அரசு தகவல்‌
புதுடெல்லி, 16 ஜனவரி (ஹி.ச.) ஈரானில் பெருகிவரும் பணவீக்கத்தின் காரணமாக வெடித்த போராட்டங்கள், அயதுல்லா கமேனியின் ஆட்சிக்கு எதிராகத் திரும்பியுள்ளன. நாட்டின் பிரதான நகரங்கள் யாவும் யுத்தகளம் போல காட்சியளிக்கின்றன. அரசாங்கத்திற்கு விரோதமாகப் போராடு
உள்நாட்டு கலவரம் நடந்து வரும் ஈரானில் சிக்கியுள்ள முதல்‌ இந்திய குழுவினர்‌ இன்று இந்தியா அழைத்து வரப்படுவர்‌ - மத்திய அரசு தகவல்‌


புதுடெல்லி, 16 ஜனவரி (ஹி.ச.)

ஈரானில் பெருகிவரும் பணவீக்கத்தின் காரணமாக வெடித்த போராட்டங்கள், அயதுல்லா கமேனியின் ஆட்சிக்கு எதிராகத் திரும்பியுள்ளன.

நாட்டின் பிரதான நகரங்கள் யாவும் யுத்தகளம் போல காட்சியளிக்கின்றன.

அரசாங்கத்திற்கு விரோதமாகப் போராடும் ஒவ்வொருவரையும் அமெரிக்காவும், இஸ்ரேலும் தூண்டிவிடுவதாகக் கூறி, ஈரான் அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அரசாங்கத்தின் துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட கொடூரமான செயல்களால் இதுவரை 3428 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.

இதன் விளைவாக, அந்நாட்டில் கல்வி பயிலவும், புனித யாத்திரை மேற்கொள்ளவும், வியாபாரம் போன்ற பல்வேறு காரணங்களுக்காகவும் சென்ற 10 ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியர்கள், வெளியேற வழியின்றி தவித்து வருகின்றனர்.

அவர்களை பத்திரமாக மீட்க மத்திய அரசாங்கம் தீவிரமாக திட்டமிட்டு வருகிறது.

எல்லா ஏற்பாடுகளும் சரியாக நடந்தேறும் பட்சத்தில், அங்கு சிக்கியிருக்கும் இந்தியர்களில் முதல் குழுவினர்‌, இன்றே தாயகம் அழைத்து வரப்படுவார்கள் என்று மத்திய அரசு வட்டாரங்கள் மூலம் அறியப்படுகிறது.

Hindusthan Samachar / JANAKI RAM